யாழில் வாள் வெட்டு மோதலுக்கு சென்றவர்களை ராணுவம் மடக்கிப் பிடித்த இராணுவம்
யாழ் நாயன்மார்கட்டு பகுதியில் வாள் வெட்டு மோதலுக்கு சென்றவர்களை ராணுவம் மடக்கிப் பிடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை ராணுவம் மறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாழும் விசேட அதிரடிப்படையினர் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கல்வியங்காடு பகுதிகளில் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்