Sun. May 19th, 2024

யாழில் வர்த்தக நிலையத்தை சேதப்படுத்திய வன்முறைக்கும்பல்

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த  வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருட்களை அடிதது சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடுத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்திவீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 26/2/2020 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிசார் தெரிவித்தனர்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது முழுமையாக தலைக்கவசம் அணிந்து இருந்த அவர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடுகள் இல்லை நிலையத்தில் இருந்து புறப்பட்ட கும்பல் அந்த வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்த உதிரி பாகங்களை அடுத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்