Sun. May 19th, 2024

தென்மராட்சி வரணி மாசேரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது ஆவா குழு தாக்குதல்

தென்மராட்சி வரணி மாசேரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (25) இரவு 11.00 மணியளவில் ஆவா குழுவினர் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்தியுள்ளனர்

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது…

நேற்றைய தினம் இரவு மகேந்திரா ரக பட்டா வாகனத்தில் வந்த 13 பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் வரணி மாசேரி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது.

குறித்த கும்பல் வாள், கோடரி, கொட்டன் போன்ற ஆயுதங்களால் வீட்டில் நின்ற மினி பஸ் மற்றும் கதிரைகள் வீட்டின் ஓடு போன்றவற்றை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்தவர்கள் பொருட்களை உடைக்கும் சத்தம் கேட்கவே வெளியில் வந்து பார்த்த போது 13 பேர் நின்றதைக் கண்டுள்ளனர் இதனால் பாதுகாப்புக் கருதி மீண்டும் வீட்டிற்குள் சென்று கதைவை பூட்டிவிட்டு அயலவர்களுக்கு தொலைபேசி மூலம் குறித்த சம்பவத்தை தெரியப்படுத்தி அயலவர்கள் முற்றுகையிடுவதற்கு முன்னர் குறித்த கும்பல் வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டும் அவர்கள் அதிகாலை 1.30 மணியளவில் தான் குறித்த இடத்திற்கு வந்துள்ளனர் எனவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்