Fri. May 17th, 2024

யாழில் மூவருக்கு கொரோனா

இன்று யாழில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 383  பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருதனார்மடம் சந்தைப் பகுதிக்குச் சென்று வந்த கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,  ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவருடன் முன்னர் தொடர்பிலிருந்த இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 120 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்