யாழில் கோரோனோவால் நேற்று 4 பேர் பலி
யாழ். குடாநாட்டில் நேற்றையதினம் மாத்திரம் 4 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 09.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுள்ளது .
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர்
புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர்
பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர்
கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர்
இவ்வாறு யாழ்குடாநாட்டைச் சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை வரை யாழ். குடாநாட்டில் 58 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்த நிலையில் நேற்று உயிரிழந்த நால்வருடன் அவ் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.