Sun. May 19th, 2024

யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது

கடந்த மாதம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற 16 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்தில் பெண் உட்பட எட்டு சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் கடந்த மாதம் 21ம் திகதி நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்களை ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி 16 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நவாலி பகுதியில் ஹெராயின் போதைப்பொருளுடன் நடமாடிய நபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தபோது குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் உட்பட 8 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நகைகளில் 12 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட தாக கூறப்படும் வாள்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், சங்கானை, பருத்தித்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்