நல்லூர் முன் வீதியில் விபச்சாரம் , 2 சிங்கள பெண்கள் உட்பட 4 பேர் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு சிங்கள பெண்கள் மற்றும் இரு இளைஞர்களும் யாழ்ப்பாணம் பொலிசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து
யாழ்ப்பாண தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த தங்குமிட விடுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த தங்குமிட விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கை பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்களும்
கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்