Wed. May 15th, 2024

யாழில் கொடூரம் , கோடரி தாக்குதலில் ஒருவர் பலி

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான மணியம்தோட்டம் 2 ஆம் குறுக்குத்தெருவை சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் என்ற 33 வயது நபர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தற்பொழுது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொல்லப்பட்ட நபருக்கும் கொழும்புத்துறை 3 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்படுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்