யாழில் கசிப்பு” வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் சட்டவிரோத மதுபானமான “கசிப்பு” வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்றைய (09) தினம் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் 20 லீற்றர் கொள்கலன் ஒன்றில் கசிப்பினை யாழ் நகருக்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.