யாழில் இடம்பெறும் ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷ உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளுகி்ன்ற சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது