Mon. May 20th, 2024

யாழில் அங்கஜன் அலுவலகத்திற்கு தீ வைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான அங்கஜன் இராமநாதன் அவர்களின் பெயர்ப் பலகைக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள அங்கஜன் இராமநாதன் அவர்களின் அலுவலக பெயர்ப் பலகைக்கே நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை பகுதியில் தீ சம்பவத்தையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் அரசியல் வாதிகள் விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீதரன் உட்பட தமிழ் இளைஞர்கள் வன்முறை சம்மவங்களில் ஈடுபட வேண்டாம் என அறிக்கைகள் விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த தீ யாழ் மாவட்டத்திலும் பரவும் சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்