Wed. May 15th, 2024

யங்கம்பன்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

யங்கம்பன்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டு கழகம் தமது வைர விழாவினை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று  சனிக்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து புங்குடுதீவு நண்பர்கள் அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். யங்கம்பன்ஸ் அணி வீரர் ரதன் ஒரு கோலைப் போட இடைவேளைக்கு முன்னர் யங்கம்பன்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இடைவேளைக்கு பின்னரான கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியினரின் ஆட்டம் அனல் பறந்தது. இதனால் புங்குடுதீவு நண்பர்கள் அணியால் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியினரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் யங்கம்பன்ஸ் அணி வீரர்கள் தர்ஷன், திரிஷன், அஜய்குமார் ஆகியோர் கோலைப் போட ஆட்ட நேர முடிவில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் ஆட்ட நாயகனாக யங்கம்பன்ஸ் அணி கோல்காப்பாளர் மகிந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்