Sat. May 18th, 2024

காற்றாலை வேலைத்திட்டத்தில் சாரதியாக கடமையாற்றிய மன்னாரை சேர்ந்த  5 பேர் இடை நிறுத்தம், தென் பகுதியில் இருந்து புதிய சாரதிகள் நியமிப்பு .

மன்னார்- நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி  வேளைத்திட்டத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சரதியாக பணியாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த 5 பேர் இடை நிறுத்தப்பட்டு அவர்களுக்கு பதிலாக தென் பகுதியில் இருந்து வந்தவர்கள் சாரதியாக கடமையாற்றுவதாக பாதீக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக பாதீக்கப்பட்ட சாரதிகள் இன்று வியாழக்கிழமை(30) மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் நடுக்குடா பகுதியில் இடம் பெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் கடந்த ஒரு வருடங்களாக (எநளவநள) நிறுவனத்தின் கீழ் சாரதிகளாக கடமையாற்றி வந்தோம்.
கடந்த 25.4.2020 அன்று எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி எங்களை வேலை நிறுத்தம் செய்தனர்.நாங்கள் அதற்கு காரணம் கேட்டதிற்கு கொழும்பு பகுதியில் இருந்து வந்த மூன்று வாகனங்களும் சாரதிகளுடன் வந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் புதிய வாகனங்கள் வரும் போது எங்களை மீண்டும் பணிக்கு அழைப்போம் என தெரிவித்தனர்.
ஆனால் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை(28-04-2020)மூன்று வாகனங்கள் வெளி மாவட்ட சாரதிகளுடன் வந்துள்ளது.
மேலும் கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.மேலதிக நேரம் வேலை செய்ததற்காக மேலதிக நேர கொடுப்பணவும் வழங்கப்படவில்லை.தற்போது வேலை இன்றி உள்ளோம்.
எனவே எங்களுக்குறிய வேலையையும்,சம்பளத்தையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-இவ்விடையம் தொடர்பாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.அன்ரனி டேவிட்சனிடம் வினவிய போது,,,
மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி  வேளைத்திட்டத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சரதியாக பணியாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த 5 சாரதிகள் முன் அறிவித்தல் இன்றி இடை நிறுத்தப்பட்டுள்ளனர். தமது பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இவ்விடையம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மன்னாரை சேர்ந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டு தென் பகுதியை சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நடுக்குடா கிராம மக்கள் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தென் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் என்ன அடிப்படையில் அழைத்து வரப்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. தென் பகுதியில் இருந்து பணியாளர்கள் அழைத்து வருகின்றமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்