Fri. May 17th, 2024

மைக்கல் நேசக்கரத்தின் முன்மாதிரியான செயற்பாடு

மைக்கலின் நேசக்கரம் ஊடாக சுவிஸ் துர்க்கை  அறக்கட்டளை நிதியுதவி வழங்கப்பட்டது.  நேற்று மாலைசந்தி மைக்கல் நேசக்கரம் நிறுவனத்தில் வைத்து இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.  புத்தூர் பகுதியில் யுத்தத்தில் கணவர் உயிரிழந்த நிலையில்  மூன்று பெண் பிள்ளைகளுடன்  சிறு குடிசையில் வறுமையில் வசித்துவரும் பெண் ஒருவரால் வாழ்வாதார உதவி கோரியிருந்தார். அதற்கு அமைவாக நேற்று சனிக்கிழமை மாடு வளர்ப்புக்கும் அதற்கான கொட்டகை அமைத்தலுக்குமாக சுவிஸ் துர்க்கை அறக்கட்டளை ரூபா 104,250 வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் மைக்கல் நேசக்கரம் ஊடாக மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  இவர்களின் முன்மாதிரியான செய்பாட்டிற்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்