மேலும் அசிங்க படுத்தும் சிஐடி ,அங்கோட மனநல மருத்துவமனையில் சுவிஸ் தூதரக ஊழியர்
சிறைச்சாலையில் காவலில் உள்ள சுவிஸ் தூதரக உள்ளூர் ஊழியர் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் இன்று காலை அங்கோடவில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் முன்னுக்கு பின் முரணாக கதைப்பதாலும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எவர் செயல்பட்டாலும் அவர்கள் அசிங்கப்படுத்தப்படுவார்கள் என்ற செய்தியையே அரசாங்கம் சொல்லவருவதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.