Mon. May 20th, 2024

மேலதிக சோதனையின் போது 85 கிலோ ஹெராயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடந்த ஜூலை 11ஆம் திகதி இலங்கையின் தென்பகுதி கடலில் வைத்து கடற்படையினரால் 6 ஈரானியர்களுடன் கைப்பற்றப்பட்ட ஒரு இழுவை படகில் இருந்து கிட்டத்தட்ட 70 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேசமயம், ஜூலை 10 ஆம் தேதி காலி கடலில் வைத்து 4 இலங்கையர்களுடன் கைப்பற்றப்பட்ட பல நாட்கள் கடலில் மீன்பிடிக்கக்கூடிய படகில் இருந்து , ஹஷிஷ் மற்றும் ஐஸ் ஆகியவற்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர் .

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகித்த போலீஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் (பி.என்.பி) சட்ட நடவடிக்கை எடுத்தது.

மேலதிக பரிசோதனையின் போது கடற்படையினரால், நேற்றைய தினம் (18), நீதிமன்ற உத்தரவின் பேரில்
மேலதிகமாக கிட்டத்தட்ட 85 கிலோ ஹெராயின் கடற்படையின் காவலில் உள்ள பல நாள் மீன்பிடி படகில் இருந்து கைப்பற்றப்படுள்ளது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பி.என்.பி.இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கடற்படை இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்