Tue. May 14th, 2024

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்

இராணுவ கட்டுப்பாடுகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.


அங்கு யாரும் செல்லாத வகையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், பொலிசார் என கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகை உள்ள இடத்திலும் , முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

எனினும் பலத்த நெருக்கடிக்கு மத்தியிலும் அஞ்சலி செலுத்தியபின்னர் சிவாஜிலிங்கம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்