Sun. May 19th, 2024

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல் பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து இன்றையதினம் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இன்றயதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணியின் அரசியல் தலைவர்கள் என தற்போது ஒன்றுகூடி இருந்தனர் .
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனும் தனது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் வந்து முள்ளிவாய்க்கால் திடலில் சத்தியப்பிரமாணம் எடுத்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்