Sat. May 18th, 2024

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கைவிசேடம்

பிறந்துள்ள சுபகிருது தழிழ் சிங்கள் புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை 8.45மணிக்கு இடம்பெற்றது.
மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு பிறந்திருக்கின்ற புதுவருடம் சிறப்பானதும் ஆரோக்கியமானதுமான வருடமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பெரியோரிடமிருந்து கைவிசேடம் பெறுதல் என்பது அந்த ஆண்டு முழுவதும் பண வரவும் நன்மைகளும் கிடக்கப்பெறும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சிறப்பம்சமாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்