முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26/5/2020 இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நாகலிங்கம் முத்துலிங்கம் என்பவர் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 14 ஆம் கட்டை பகுதியில் காட்டுயானை தாக்கியுள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே விபத்தில் காயமடைந்த நிலையில் ஊன்றுகோலுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது யானை தாக்கியதில் இரு கால்களிலும் படுகாயமடைந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியையும் யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.