முல்லைத்தீவு பூப்பந்தாட்ட கட்டடம் கையளிக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு விளையாட்டுத் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு வேலைகள் முடிவுறுத்திய நிலையில் கட்டட ஒப்பந்தக்காரர் அபி ஒப்பந்த நிறுவகத்தால் வடமாகாண விளையாட்டுத் துறை பணிப்பாளரிடம் கையளிக்கப்படது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட மாகாண நிலை வீரர்கள், விளையாட்டு திணைக்கள உத்தியோகத்தர்கள், கட்டங்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், அபி ஒப்பந்த நிறுவக உரிமையாளர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.