முல்லைத்தீவில் கொடூரம், பாரவூர்தி- மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பத்தலைவர் பலி
முல்லைத்தீவில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 3.40 மணிக்கு இடம்பெற்றது.
சம்பவத்தில் நல்லதம்பி இராசகுமாரன் (வயது -44) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து பாரவூர்திச் சாரதி கைது செய்யப்பட்டதுடன் பாரவூர்தியும் பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
உயிரழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.