மீண்டு அதிரடி காட்டிய கோத்தபாய , 900 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரை வேறு துறைக்கு மாற்றம்
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் (பி.எஸ்.டி) சுமார் 900 அதிகாரிகள் மற்றய போலீஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, PSD அதிகாரிகள் தங்கள் பணிபுரிய விரும்பும் எதாவது 2 போலீஸ் பிரிவுகளின் பெயர்களை தருமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி) சி. டி. விக்ரமரத்ன கோரியுள்ளார். பொலிஸ் வட்டாரங்களின்படி, ஐ.ஜி.பி சி. டி. விக்ரமரத்ன , 900 பி.எஸ்.டி அதிகாரிகளையும் நவம்பர் 24 முதல் அமுலில் உள்ளவகையில் உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டதாகவும், அவர்கள் பணிபுரிய தயாராக இருக்கும் இரண்டு பிரிவுகளின் பெயர்களை வழங்குமாறு கோரியதாகவும் தெரியவருகிறது
இந்த குழுவில் 18 உயர் அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. வினைத்திறன் உள்ளவகையில் அதிரடி மாற்றங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது