மின்னல் தாக்கி 10 வயதுச் சிறுமி பலி
மின்னல் தாக்கியதில் 10 வயதுச் சிறுமி பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை கொஸ்லந்தை பகுதியில் நடைபெற்றது.
சம்பவத்தில் கொஸ்லந்தை பகுதி ஓக்வில் தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் ருக்சி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
சேனப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தாய் மற்றும் சகோதரருடன் சிறுமி சென்றுள்ளார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.