நுவரெலியா, இராகலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு
நுவரெலியா, இராகலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை இராகலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரையும், மதன மோதக என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில், கசிப்பு உற்பத்தி செய்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார், அங்கு சென்று சுற்றிவளைத்த போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 5 லீற்றர் கோடா, மற்றும் ஸ்பிரிட் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பவற்றை மீட்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு அப்பகுதியில் மதன மோதக என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும், மற்றும் மீட்கப்பட்ட பொருட்களையும் நுவரெலியா நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.