மாவீரர் வாரம், யாழின் பலபகுதிகளில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
23.11.2020 இன்று நெல்லியடி நகரப்பகுதியில் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி கோணாரா தலைமையில் பொலிசார் நகரப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள். இவ்வாரம் மாவீரர் தினம் ஆனபடியால் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளார்கள் என்று பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதே நிலைமையே யாழின் பலபகுதிகளில் காணப்படுவதாக எமது நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்