மாவிலாற்றில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன யாழ் பல்கலைக்கழக இளைஞர்
திருகோணமலை மாவிலாற்றில் நேற்றைய தினம் மாலை நான்கு மணியளவில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தவர் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த வேலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
சம்பவத்தில் காணாமல் போனவர் திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதி மாரியம்மன் கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் சஜீவன் வயது 22 என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் என்று தெரியவருகிறது