Fri. May 17th, 2024

மன்னார் மாவட்டத்தில் இது வரை கொரோனா பாதீப்புக்களும் இல்லை-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் காணப்படுகின்ற போதும்,மாவட்டத்தில் இது வரை எவ்வித பாதீப்புக்களும் இல்லை.எனினும் மன்னார் மாவட்டத்தில் முன்னாயத்த நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்,மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வைத்தியர்கள் டராணுவ உயர் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-குறித்த கலந்தiராடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பில் தொடர்ச்சியாக  அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக புத்தளத்தில் இருந்து மன்னாரிற்கு வரும் மக்கள் தொடர்பாக நாங்கள் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம்.
அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறையனாளன் குளம் மந்றும் மறிச்சிக்கட்டி பகுதிகளில் பொலிஸார் விசேட காவலரன் அமைத்து புத்தளத்தில் இருந்து வருபவர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-புத்தளத்தில் இருந்துமன்னாரிற்கு வருகின்றவர்களினால் மன்னாரில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரசின் பாதீப்பு ஏற்படலாம் என்கின்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
-மேலும் மக்கள் மத்தியில் இவ்விடையம் தொடர்பாக விழிர்ப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிராம மட்டங்களில் கிராம அலுவலகர்களின் தலைமையில் உரிய அதிகாரிகளை இணைத்து குழு அமைக்கப்பட்டு கிராம மட்ட ரீதியில் விழிர்ப்புணர்வு மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டது.
-மன்னார் நடுக்குடா பகுதியில் பாரிய இரண்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த வேலைத்திட்டங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் கடமையாற்றி வருகின்றனர்.குறிப்பாக சைனா மற்றும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதிகம் வேலை செய்கின்றனர்.
-எனவே மக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டங்கள் இரண்டையும் தற்காலிகமாக நீக்கி வைப்பதோடு,அவர்களை வேலைகளில்  ஈடுபடாமல் அவர்களின் வதிவிடங்களில் இருப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
குறிப்பாக அவர்களின் தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளோம்.மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை முன்னெடுக்கப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.குறிப்பாக வைத்திய துறையினரின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
வெளி மாவட்டங்களை சேர்ந்த வைத்தியர்கள்,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதினால் அவர்களுக்கான உணவு அவர்களின் தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வைத்தியர்கள் தமது வாகனங்களில் வெளியில் சென்று வர பாஸ் வழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மக்களை தமது வீடுகளில் இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மக்களின் நடமாட்டம் கணப்படுகின்ற போது அதன் தாக்கமும் அதிகரிக்கும்.எனவே மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களையும் கட்டுப்படுத்துவதே எமது நோக்கம்.
தேவையில்லாமல் மன்னார் மாவட்டத்தினுள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக வர வேண்டாம்.தவிர்க்க முடியாத சரியான காரணங்களுடன் வருகின்றவர்களை நாங்கள் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.
மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் நாங்கள் பதிவுகளுக்கு உற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.மக்கள் மத்தியில் போதிய விழிர்ப்புணர்வு காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்