Mon. May 20th, 2024

மாமுனை கடலில் வைத்து 45 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(06) அதிகாலை 3 .30 மணியளவில் வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது படகில் எடுத்துச் செல்லப்பட்ட 45 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  படகிலிருந்த மருதங்கேணி பகுதியை சேர்ந்த 45, 35 வயதுடைய  இருவர் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்