பேராயாின் எச்சாிக்கை கடிதம் ஜனாதிபதிக்கு. தேவாலயங்களில் பாதுகாப்பு உச்சம்.
இம் மாதம் 15ம் திகதிக்கும் 25ம் திகதிக்கும் இடையில் தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம். என எச்சாித்து பேராயா் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
இதனை தொடா்ந்து இலங்கையில் பல கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் மோப்பநாய் சகிதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இரு மாதங்களின் பின்
வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் சில நாட்களாக வவுனியாவில் பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இன்று (06.10) காலை வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மோப்பநாய் சகிதம் சென்ற பொலிஸார் ஆலய வளாகங்களை பரிசோதனை செய்திருந்தனர்.
இதேவேளை அண்மையில் யாழ் உட்பட பல பகுதிகளில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.