மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு!!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பமாகும் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.