Fri. May 17th, 2024

மாந்தை மேற்கில் நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டம் ஆரம்பித்து வைப்பு-

நாட்டை அழகு படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பயணிகள் தரிப்பிடங்கள் தூய்மையாக்கப்பட்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரையும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை (4) காலை இடம் பெற்றது.

-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் , அடம்பன் பொலிஸாரின் அனுசரனையுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மாந்தை மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டு வர்ணம் பூசுதல் மற்றும் படம் வரையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
-குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேசச் செயலாளர்,இளைஞர்கள்,பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 10 பயணிகள் தரிப்பிடங்கள் இவ்வாறு தூய்மையாக்கி வர்ணம் பூசப்பட்டு படம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்