மலசல கூட நாற்றம், உடனடியாக நடவடிக்கை எடுத்த தவிசாளர்
07.06. நெல்லியடி நகரில் உள்ள மலசல குளியரை உடைந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்றைய தினம் இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் உடனடியாக இரவு இரவாக திருத்தப்பட்டு விடியக்காலை மக்களின் பாவனைக்கு விடப்பட்டது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் உடனடியாக தொலைபேசி மூலம் எடுத்துக் கூறியிருந்தார். மக்களின் பாவனைக்கு குளியலறை உடனடியாக திருத்தம் செய்து திறக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார்