மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதாக கடற்றொழில் மற்றும் நீர்வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார் .
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் நிலைகளில் இறால் மற்றும் நண்டுப் பண்ணை போன்றவற்றுக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.
மன்னார் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பொழுதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போதுமேலும் இந்த சந்திப்பில் நடைமுறை ரீதியான சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்களை இதன்போது மன்னார் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் எடுத்துக் கூறப்பட்டது.
மீனவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர், நேரடியாக மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் நியாயமான தீர்வுகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.