மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை தடுக்க முயற்சி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகு படுத்தி பல்வேறு கட்டிடங்களை அமைத்து நகர சபைக்கு வருமானத்தை ஈட்டி வருமானத்தின் ஊடாக நகரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்கின்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசியல் வாதியான சட்டத்தரணிகள் சிலர் குறித்த வேளைத்திட்டங்களை தடுத்திருக்கின்றார்கள் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மன்னார் நகர சபையின் விசேட அமர்வு இன்று புதன் கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இன்று புதன் கிழமை காலை 10.30 மணியளவில் விசேட அமர்வு இடம் பெற்றது.
இதன் போது நகர சபையின் செயலாளர்,உப தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நகர முதல்வர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
குறித்த அமர்வில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியை மையப்படுத்தி பல வேளைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் அடிப்படையில் அதற்கான இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய காரணத்தினால் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக சட்ட விரோதமாக அங்காடி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு அதற்கான மாற்று இடங்களும் வழங்கப்பட்டு இடங்களை நாங்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வந்தோம்.
-இந்த நிலையில் மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்கம் என்கின்ற போர்வையில் ஒரு சில நபர்கள் தமது சங்க கட்டிடம் உடைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் கூடாக நீதிமன்றத்தில் எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
-உண்மையில் அந்த இடம் மன்னார் நகர சபைக்கு செந்தமானது.அபிவிருத்தி கருதி நாங்கள் வேளைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.
இந்த நிலையில் நகரத்தின் அபிவிருத்தியை நிறுத்த வேண்டும்.
அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு சில காரணத்தினால் சில அரசியல் வாதிகளாக இருக்கின்ற சட்டத்தரணிகள் தமது சுய இலாபத்திற்காகவும்,தமது அரசியல் ஆதாயத்திற்காகவும் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும் இவ்வாறான வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
இன்றைய(13) சபை கூட்டத்தில் ஏகமனதாக உறுப்பினர்கள் இணைந்து பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.
குறித்த வழங்கிற்கு எதிராக எமது சட்டத்தரணிகள் மற்றும் மேலதிகமாக சட்டத்தரணிகள் தேவைப்படும் பட்சத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்தரணிகளை அழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்தரணிகளை அழைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
-ஆசிய அபிவிருத்தி வங்கியின் 550 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகு படுத்தி பல்வேறு கட்டிடங்களை அமைத்து நகர சபைக்கு வருமானத்தை ஈட்டி வருமானத்தின் ஊடாக நகரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்கின்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசியல் வாதிகலான சட்டத்தரணிகள் சிலர் இந்த வேளைத்திட்டங்களை தடுத்திருக்கின்றார்கள்.
குறித்த விடையம் எமக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
மக்களுக்கு நல்லதொரு சேவையை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு,சபையை நாங்கள் பாரம் எடுத்து பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்ற நேரத்தில் எமக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 550 மில்லியன் ரூபாய் நிதிக்கும்,அமைக்கப்பட்டு வருகின்ற பேரூந்து தரிப்பிடத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
அரசியல் வாதிகலான சட்டத்தரணி தமது முக நூல் ஊடாக போலிப் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
குறித்த 550 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில் தனது அரசியல் நோக்கத்திற்காக போலி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை நகர சபை உறுப்பினர்கள் மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.