Tue. May 14th, 2024

மன்னாரில் விளையாட்டு வீரர்களுக்கான உதைபந்தாட்ட உபகரணங்கள் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள திறமை வாய்ந்த உதைபந்தாட்ட   வீரர்களுக்கான கால்பந்தாட்ட உபகரணங்கள் நேற்று புதன் கிழமை மாலை 7 மணியளவில் சட்டத்தரணி  டினேஸன் தலைமையில்   தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
இம் மாதம் பிரமாண்டமாக இடம் பெறவுள்ள மன்னார் உதை பந்தாட்ட சுற்று போட்டியை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள திறமையான வீரர்களை உள்ளடக்கிய மன்னார் பீனிக்ஸ் அணியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு தேவையான பாதணிகள் மற்றும் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
 மன்னார்,நானாட்டான்,மாந்தை, மடு, முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் திறமையான வீரர்களுக்கு  விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முகமாக  சுமார் 30 வீரர்களுக்காக குறித்த விளையாட்டு உபகரணங்கள் நேற்றைய தினம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான இலவச பயிற்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்