மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரண்ஙகள் வழங்கி வைப்பு-
முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் உப்புக்குளம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று உப்புக்குளம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது சுமார் 200 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
இதன் போது மாணவர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.