Mon. May 13th, 2024

பெண்களிற்கான  கரபந்தாட்ட போட்டியில்  வரணி ஒளிர் அணி சம்பியன்

தென்மராட்சி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான  கரபந்தாட்ட போட்டியில்  வரணி ஒளிர் அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் வரணி ஒளிர் அணியை எதிர்த்து நாவற்குழி விவேகானந்தா அணி மோதியது. இதில் ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய வரணி ஒளிர் அணி 25:17, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில்  வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்