மன்னாரில் திடீரென மயங்கி வீழ்ந்து இறந்த நபர்
மன்னார் – இலுப்பைக்கடவை படகுதுறை பகுதியில் நேற்று மாலை 34 வயதுடைய நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்
இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில் மீன்வலை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்
மயங்கி வீழ்ந்த நபரை நோயாளர் காவு வண்டி ஊடாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இலுப்பைக்கடவை பகுதியை சேர்ந்த வினோதன் (34 வயது) என தெரியவருகிறது
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது