Sat. May 18th, 2024

மன்னாரில் அதிகரிக்கும் கோரோனோ தொற்றாளர்கள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கும் கடந்த வாரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பரிசோதனைகளின் போது மன்னார் நகரப் பகுதி மற்றும் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களில் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இதுவரை பிரதான கடை தொகுதிகளில் சுமார் 15 வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதுடன் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி நகர்ப் பகுதிக்குள் வருவதையோ அல்லது கூட்டம் கூடுவதையோ தவிர்க்குமாறு பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்