மந்திகை வைத்தியசாலையில் வேலை செய்யும் சிங்கள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு நெல்லியடி வர்த்தக சங்கம் உதவி
29.03.2020. இன்று நெல்லியடி வர்த்தகர் சங்கம் நம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக பல மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வர்த்தக சங்கம் மூலமாக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து விடுதியில் தங்கியிருந்து கடமையாற்றும் சகோதர இனத்தை சேர்ந்த வைத்தியர்கள் தாதியர்கள் 40 பேருக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மற்றும் வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகுதி கிருமி நீக்கிய சவர்க்காரம் களையும் இலவசமாக நெல்லியடி வர்த்தகம் சங்கம் வழங்கி வைத்துள்ளது. இந்நிகழ்வில் வர்த்தகசங்க செயலாளர் சுரேரஞ்சன் மற்றும் வர்த்தக சங்க பொருளாளர் அருள் ஆகியோர் கலந்து வழங்கி வைத்தார்கள்