Mon. May 20th, 2024

மந்திகை சந்தை பகுதியில் மகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்த குளவிக்கூடு சற்று முன்னர் எரிப்பு

வடமராட்சி மந்திகை சந்தையில் உள்ள அரச மரத்தில் காணப்பட்ட இராட்சத குளவிக் கூடு யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் படையினரினால் சற்றுமுன்னர் எரிக்கப்பட்டது. இந்த குளவிக்கூடு தொடர்பாக பலதடவைகள் பிரதேச செயலகம் மற்றும் சபையினரிடம் எடுத்து கூறியும் ஒன்றும் இடம்பெறாத நிலையில்,   இணையதளத்தில் இந்த செய்திகள் வெளியான நிலையில் யாழ் மாநகரசபை தீயணைப்பு குழுவினரால் இன்று மாலை அந்த பகுதியில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.  இந்த குளவிக்கூட்டை  தேன் கூடு என்று பிரதேச செயலாளர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்