மந்திகை சந்தியில் துப்பாக்கி பிரயோகம், இளைஞன் படுகாயம்
13.05.2020 அன்று இரவு 11 30 மணியளவில் மந்திகை சந்தியில்ஊரடங்கு சட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பசுபதி அனுசன் வயது 23 மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றதல் ராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. தனிசனுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மந்திகை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் புலோலி முறாவில் பருத்தித்துறையை சேர்ந்தவர்.
அதேநேரம் மண் ஏற்றும் பிரச்சினையால் வீதியால் வந்த ராணுவத்தினருக்கு மந்திகை பகுதியில் வைத்து கல் எறியப்பட்டு இராணுவத்தினர் ஒருவர் காயங்களுடன் மந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கல் எறிதல் சம்பவத்தினாலேயே மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற சுதர்சன் மீது சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மந்திகை பகுதி தற்போது பதற்றமான நிலை காணப்படுகின்றது.