Thu. May 16th, 2024

மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை, மக்களே அவதானம்

சமுக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது . இவ்வாறான நிதி மோசடிகள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள மதியவங்கி , குறிப்பாக இலகுகடன் வழங்கப்படுவதாக தெரிவித்து, பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது .

இவ்வாறு கூறி கொண்டு மக்களை சமுக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய வழியில் அணுகுகின்றவர்களிடம், மக்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என்று மதியவங்கி கேட்டுக்கொண்டுள்ளது . குறிப்பாக வங்கிக் கணக்கு விபரங்கள் கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டைகளின் தொடரிலக்கம் மற்றும் இரகசிய இலக்கம் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்