Tue. May 14th, 2024

மடு  பிரதேசச் செயலாளர் பிரிவில்  இடம் பெற்ற இலவச நடமாடும் மருத்துவ முகாம்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26)  இலவச நடமாடும் வைத்திய முகாம் இடம் பெற்றுள்ளது.
வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஜீ. குணசீலன் தலைமையில் குறித்த இலவச நடமாடும் வைத்திய முகாம் நடை பெற்றது.
குறித்த நடமாடும் வைத்திய முகமானது மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன வலயன் கட்டு, விலாத்திக் குளம் , பரிசன் குளம் ஆகிய கிராமங்களில் முன் னெடுக்கப்பட்டது.
இதன் போது குறித்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக் கொண்டதோடு இலவசமாக மருந்துகளைப் பெற்றுக் கொண்டனர்.
குறித்த நடமாடும் வைத்திய முகாமில் கலந்து கொண்ட மக்கள் சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியில் வரிசையாக நின்று மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நட்டின் அனைத்து வித செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.அந்தவகையில் மன்னார் மாவட்டத்தின் அனைத்துவிதமான செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் தற்போது மருத்துவ சேவையினை பெற்றுக் கொள்ள பல்வேறு அசௌகரியங்களக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த நடமாடும் வைத்திய முகாம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்