போதைவஸ்த்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் தப்பியோட்டம் பொலீஸார் வலைவீச்சு
நெல்லியடி இராஜ கிராம பகுதியில் போதைவத்து விற்பனையில் ஈடுபட்ட 21 வயதுடைய இளைஞர் ஒருவரை நெல்லியடி பொலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை நெல்லியடி இராஜ கிராம பகுதியில் இளைஞர் ஒருவாரால் போதைவத்து விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் குறித்த இளைஞரை பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே நெல்லியடி நகர் பகுதியில் போதைவத்து விற்பனையில் ஈடுபடுபவர் எனவும், பாடசாலை மாணவர்களிடையேயும் போதைவஸ்த்து விற்பனைக்கு காரணமானவர் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த நபர் பொதுமக்கள் மற்றும் நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் நிற்கும் பயணிகளுடன் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.