Fri. May 17th, 2024

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுப்பதாக ஏமாற்றிய நபர் நெல்லியடியில் கைது

19.06.2020 நேற்று மதியம் பருத்தித்துறையில் வைத்து நெல்லியடி போலீசில் இருக்கும் முறைப்பாட்டை இல்லாமல் செய்வதாக கூறி, முறைப்பாடு எழுதும் பகுதியில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 2000 ரூபாவும் இரண்டு போத்தல் சாராயம் வாங்கி தருமாறும்  தான் கொண்டு போய் கொடுப்பதாக கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வழக்காளியிடம் பணத்தையும் சாராய போத்தலையும் பெற்றுள்ளார். சாராய போத்தல் வாங்கியவர் கரவெட்டி பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  வழக்காளி 5 மணி அளவில் நெல்லியடி போலீசில் முறைப்பாட்டு பகுதியில் முறையிட்டுள்ளார். உடனடியாக போலீஸ் பொறுப்பதிகாரி அறிவுறுத்தலுக்கு  அமைய   இரவு 9 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் வாங்கிய பணம் சாராயப் போதிலும் இன்று கொண்டு வந்து தருவதாக கூறியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்