Mon. May 20th, 2024

பெண்களுக்கான எறிபந்தாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் மகுடம் சூடியது

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான எறிபந்தாட்ட போட்டியில் சம்பியன் கிண்ணங்களை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியினர் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்தாட்ட போட்டிகள் நேற்று புதன்கிழமை விக்கினேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணியும்,  மூன்றாமிடத்தை வல்வை சிவகுரு வித்தியாலய அணியும் பெற்றனர்.
20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும்,  இரண்டாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணியும்,  மூன்றாமிடத்தை வல்வை மகளிர் கல்லூரி அணியும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க பாடசாலையும்,  இரண்டாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் மூன்றாமிடத்தை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியும் பெற்றனர்.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணியும்,  இரண்டாமிடத்தை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியும்,  மூன்றாமிடத்தை விக்கினேஸ்வரா கல்லூரி அணியும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்