Sat. May 18th, 2024

பூநகரி செல்வபுரத்தில் கோர விபத்து!! -4 பேர் காயம்-

பூநகரி செல்விபுரம் பகுதியில் நள்ளிரவு நடந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து கப் வாகனம் வீதி ஓரத்தில் இருந்த மரமொன்றுடன் மோதியுள்ளது.

வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில் இருக்கையில் அமர்ந்து பயணித்த சாரிதி மற்றம் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயங்களிற்குள்ளாகியுள்ளனர். மரத்துடன் மோதுண்டமையால் வாகனம் பலத்த சேதமடைந்தள்ளது.

குறித்த இருவரும் பலத்த பிரயத்தனங்கள் மத்தியில் மீட்கப்பட்டுள்ளனர். பின்னால் இருந்து பயணித்த இருவரும் சாதாரண காயங்களிற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்