Fri. May 17th, 2024

புலோலி காந்தியூர்ப் பகுதியில் இருவர் மீது வாள் தாக்குதல் வர்த்தக நிலையம் சேதம்

புலோலி காந்தியூர்ப் பகுதியில் இருவர் மீது வாள் தாக்குதல் வர்த்தக நிலையம் சேதமாக்கப்பட்டது
வடமராட்சி புலோலியூர் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில் வர்த்தக நிலையம் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு ஏழு முப்பது மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருசாராருக்கு இடையே . இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . இச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் வயது 22 புவனேஸ்வரன் குககராஜ்வயது 19 ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டு உள்ளன போலீசார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்